ஆப்நகரம்

சமூகவலைதளங்களில் திடீரென டிரெண்டாகும் #மூன்றெழுத்து - காமெடிகள்...!

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோவால் தற்போது சமூகவலைதளங்களில் மூன்றெழுத்து என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 16 Aug 2019, 3:28 pm
கடந்த மே மாதம் இறுதியில் திடீரென டிரெண்டான ஒரு விஷயம் என்னவென்றால் நம்ம நேசமணி தான். பேஸ்புக்கில் ஒரு பக்கம் சுத்தியல் புகைப்படத்தை வெளியிட அதற்கு நேசமணியை இழுத்து அவருக்கு ப்ரே செய்து வந்த ஹேஷ்டேக் வைரலாகியது.
Samayam Tamil சமூகவலைதளங்களில் திடீரென டிரெண்டாகும் மூன்றெழுத்து


அவர் ப்ரே செய்ததது மட்டுமல்லாமல் இன்று அந்த போஸ்ட் வைரலாகி இந்தியாவே அதற்காக ப்ரே செய்தது. பலர் நேசமணிக்காக உண்மையிலேயே பிரார்த்தனைகள் செய்து புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டனர்.

தமிழகத்தில் பிரெண்ட்ஸ் படத்தின் நேசமணிக்காகத் தான் இதைச் செய்கிறார்கள் எனத் தெரிந்தாலும், வெளி மாநிலக்காரர்கள் யார் இந்த நேசமணி இவருக்கு என்ன ஆனது எனக் கேட்கும் அளவிற்கு பெரும் வைரலானது இந்த சம்பவம்.


Read More: தன்னைத்தானே சாப்பிட்டுக்கொள்ளும் பாம்பு...! வைரலாகும் வீடியோ

தற்போது அதே போல ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் போட்டார். 1968ம் ஆண்டு வெளியான மூன்றெழுத்து என் திரைப்படத்தின் ஒரு காட்சியில் அத்தனை நடிகர்களும் மூன்றெழுத்து என்ற சொல்லை வைத்தே வசனம் பேசுவார்கள்.

இந்த வீடியோவை அவர் வெளியிட்டதும் இது பெரும் அளவிற்கு வைரலானது. இதில் பலர் வந்து மூன்றெழுத்து கமெண்ட்களை செய்து வருகின்றனர். மேலும் இந்த வசனத்தின் பேட்டனிலேயே பலர் டுவிட் செய்து வருகின்றனர். அதில் சில டுவிட்களை கீழே காணுங்கள்.


Read More: ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கு அதிக வரி போட்ட உணவகம் இழுத்து மூடல்...!




Read More: 102 நாள் ஓட்டலில் தங்கிவிட்டு ரூ12 லட்சத்தை "ஏப்பம்" விட்டு சென்ற தொழிலதிபர்



Read More: கேரள மழையில் காதல் பொழியும் புதுமண தம்பதி...! - வைரலாகும் வீடியோ


அடுத்த செய்தி