ஆப்நகரம்

போலியான புகைப்படத்தை பதிவிட்டு குமுறி குமுறி வருந்திய நடிகையின் கணவர்!

நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தீஷ் தேஷ்முக், துருக்கிக்காக வேண்டுங்கள் என்று கூறி, ஸ்டாக் படங்களை பதிவிட்டது, கேலி பொருளாகி வருகிறது.

Samayam Tamil 31 Oct 2020, 10:32 am
துருக்கி மற்றும் கிரீஸ்'ல் கடந்த வெள்ளிக்கிழமை (30-10-2020) அன்று பூகம்பம் ஏற்பட்டது. துருக்கியில் தற்சமயம் வரை 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர், மற்றும் 19 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. மேலும், கிரீஸிலும் பூகம்பத்தினால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Samayam Tamil போலியான புகைப்படத்தை பதிவிட்டு குமுறி குமுறி வருந்திய நடிகையின் கணவர்!



இந்த சம்பவம் அறிந்த உடனேயே உலக நாடுகளை சேர்ந்த அரசியல் மற்றும் திரைப்பட பிரபலங்கள் தங்களது அனுதாபங்களை ட்விட்டர் போன்ற சமூக இணையத்தளங்ளைல் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி தான் நடிகை ஜெனிலியாவின் கணவரும், இந்தி நடிகருமானரித்தீஷ் தேஷ்முக், Pray for Turkey என ட்விட்டரில் பதிவிட்டார். தனது பதிவில், ஒரு நாய் பூகம்ப இடிபாட்டில் சிக்கியிருக்கும் தனது உரிமையாளர் அருகே சோகமாக இருப்பது போன்ற படங்களையும் சேர்த்து பதிவிட்டிருந்தார் தேஷ்முக்.

இங்கே தான் ரித்தீஷ் தேஷ்முக் ஒரு தவறு செய்துவிட்டார். அவர் பதிவிட்ட படங்கள், நிஜமாகவே பூகம்பம் ஏற்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கிடையாது.

செய்தி புகைப்படங்கள் போலவே, ஒரு நிகழ்வுக்கு ஏற்றார் போல, சித்தரிக்கப்பட்டு ஸ்டாக் புகைப்படங்கள் போலியாக எடுத்து, இணையங்களில் விற்கப்படும். அப்படியான பழைய ஸ்டாக் புகைப்படங்களை தான் ரித்தீஷ் தேஷ்முக் உண்மை நிலை அறியாமல் ட்விட்டரில் பகிர்ந்துவிட்டார்.


ரித்தீஷ் தேஷ்முக் பதிவின் கீழே, முகமது ஸுபைர் என்பவர், இந்த உண்மை தகவலை பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்த ஸ்டாக் புகைப்படங்கள் பல்வேறு தருணங்களில், பல்வேறு பூகம்ப நிகழ்வுகளின் போது, செய்திகளில் உபயோகப்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


இனிமேலாவது பிரபலங்கள், தாங்கள் பதிவிடும் முன்னர், தகவல் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களின் உண்மை தன்மை அறிந்து பதிவிடுவது அவசியம். இல்லையேல், அவர்களை பின்தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்கள், அதை உண்மை என்று நம்பி சமூக இணையதளங்கள் அனைத்திலும் பகிரும் வாய்ப்பு உள்ளது.

அடுத்த செய்தி