ஆப்நகரம்

"சிக்சர் நாயகனுக்கு நன்றிகள் பல" டுவிட்டரில் உணர்ச்சிகளை கொப்பளிக்கும் யுவராஜ் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, அதன் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தகாரர் யுவராஜ் சிங், இவரது கிரிக்கெட் விளையாட்டை பார்த்து எதிரணியினர் மனதில் பெரும் பயம் இருக்கும்.

Samayam Tamil 10 Jun 2019, 4:54 pm
இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, அதன் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தகாரர் யுவராஜ் சிங், இவரது கிரிக்கெட் விளையாட்டை பார்த்து எதிரணியினர் மனதில் பெரும் பயம் இருக்கும். இவரை மைதானத்திற்குள் பகைத்துக்கொண்டால் என்ன ஆகும் என்பதை 2007ம் ஆண்டு டி20 உலககோப்பை விளையாடிய இங்கிலாந்து அணியினரை கேட்டால் தெரியும். அந்த அளவிற்கு அவரது திறமையான விளையாட்டை வெளிப்படுத்தினார்.
Samayam Tamil சிக்சர் நாயகனுக்கு நன்றிகள் பல டுவிட்டரில் உணர்ச்சிகளை கொப்பளிக்கும் யுவராஜ் ரசிகர்கள்


இதற்கிடையில் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை, அவரது பெர்பாமென்ஸை குறைத்தது. அந்த உடல்நிலையில் இருந்து மிகுந்த போராட்டத்தை நடத்தி மரணத்தில் இருந்து மீண்டு வந்தது மட்டும் இல்லாமல் மீண்டும் முழு உடற்தகுதியுடன் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தார்.

இரண்டாவது முறையாக இணைந்தபோதும் தனதுஆட்டத்தை சிறப்பாக வெளிகாட்டினார். ஆனால் பெரிய அளவிற்கு ஜெயிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் திடீரென இன்று காலை தான் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் பலர் இதுவரை அவரது விளையாட்டை பாராட்டியும் நினைவு கூர்ந்தும் டுவிட் போட்டு வருகின்றனர். அதில் சிலவற்றை கீழே காணலாம்.






















அடுத்த செய்தி