தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை ஏற்றுக்கொள்வதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 1952ம் ஆண்டு முதலாக, தமிழக சட்டப்பேரவையில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், மக்கள் சேவை செய்துவருகின்றனர். கடந்த 63 ஆண்டுகளில், முதல்முறையாக, தற்போதைய தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் ஒரு வேட்பாளர் கூட வெற்றிபெறவில்லை.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சிபிஐ கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா, இடதுசாரி வேட்பாளர்களின் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது என்பது பற்றி, விரிவாக விவாதித்து, இடதுசாரிக் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டும் என்றும் டி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக தேர்தலில், பணநாயகம் வென்றபோதிலும், வரும் காலத்தில் இந்நிலை மாற்றியமைக்கப்படும் என, டி.ராஜா சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த 1952ம் ஆண்டு முதலாக, தமிழக சட்டப்பேரவையில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், மக்கள் சேவை செய்துவருகின்றனர். கடந்த 63 ஆண்டுகளில், முதல்முறையாக, தற்போதைய தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் ஒரு வேட்பாளர் கூட வெற்றிபெறவில்லை.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சிபிஐ கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா, இடதுசாரி வேட்பாளர்களின் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது என்பது பற்றி, விரிவாக விவாதித்து, இடதுசாரிக் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டும் என்றும் டி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக தேர்தலில், பணநாயகம் வென்றபோதிலும், வரும் காலத்தில் இந்நிலை மாற்றியமைக்கப்படும் என, டி.ராஜா சுட்டிக்காட்டி உள்ளார்.