ஆப்நகரம்

2018 மே மாதத்திற்குள் கிராமங்களில் மின்சார வசதி; 100நாள் வேலை திட்டத்திற்கு ரூ.48000 கோடி ஒதுக்கீடு

2018ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி செய்து முடிக்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Feb 2017, 11:50 am
2018ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி செய்து முடிக்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we are well on our way of achieving 100 village electrification jaitley says
2018 மே மாதத்திற்குள் கிராமங்களில் மின்சார வசதி; 100நாள் வேலை திட்டத்திற்கு ரூ.48000 கோடி ஒதுக்கீடு


அடுத்து வரும் காலங்களில் கிராமங்களின் வளர்ச்சி குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.
கிராம மக்களின் வேலைவாய்ப்பை வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2016-17 நிதியாண்டில் ரூ. 38,500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 2017-18 ரூ 48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.

அதுமட்டுமல்லாது கிராமப்புறங்களை முன்னேற்றும் வகையில் அவர்களின் அடிப்படை தேவையான மின்சார வசதியை 2018 மே மாதம் 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களில் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்