ஆப்நகரம்

இந்தியாவுக்கு மட்டும் ஸ்பெஷல் அப்டேட் அளிக்கிறது வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப் மெசஞ்சர் தனது இந்திய பயனாளர்களுக்கு மட்டும் சிறப்பாக புதிய அப்டேட் ஒன்றை அளிக்கவுள்ளது.

ET Online 4 Apr 2017, 2:24 pm
வாட்ஸ் ஆப் மெசஞ்சர் தனது இந்திய பயனாளர்களுக்கு மட்டும் சிறப்பாக புதிய அப்டேட் ஒன்றை அளிக்கவுள்ளது.
Samayam Tamil whatsapp all set to launch p2p payment services in india
இந்தியாவுக்கு மட்டும் ஸ்பெஷல் அப்டேட் அளிக்கிறது வாட்ஸ் ஆப்


வாட்ஸ் ஆப் மொபைல் அப்ளிகேஷனை உலகம் முழுவதும் 1.2 பில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் பயனாளர்களைக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள அதிக பயனாளர்களைக் கவர அந்நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அளிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனையின் பயன்பாடு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கான புதிய வசதி வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனில் இணைக்கப்பட உள்ளது.

யு.பி.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எந்த வங்கிக்கணக்கில் இருந்தும் எந்த வங்கிக்கணக்குக்கும் பணத்தை மாற்றும் வசதி அறிமுகமாக உள்ளது.

அடுத்த செய்தி