ஆப்நகரம்

ஸ்டாலின் எதற்கு லோக்ஆயுக்தா கேட்கிறார்? விஜயகாந்த் விளக்கம்

''திமுகவுக்குத்தான் ஊழல் என்றால் என்ன என்பது தெரியும். அதனால் தான் அவர்கள் லோக் ஆயுக்தா கொண்டு வருவோம்'' என்று கூறுகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பள்ளிப்பட்டில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

TOI Contributor 17 Apr 2016, 4:54 pm
''திமுகவுக்குத்தான் ஊழல் என்றால் என்ன என்பது தெரியும். அதனால் தான் அவர்கள் லோக் ஆயுக்தா கொண்டு வருவோம்'' என்று கூறுகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பள்ளிப்பட்டில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
Samayam Tamil why is stalin asking for lokayukta vijayakanth
ஸ்டாலின் எதற்கு லோக்ஆயுக்தா கேட்கிறார்? விஜயகாந்த் விளக்கம்


தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மாக. சார்பில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், கே.வி.குப்பம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான தே.மு.தி.க. வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டில் நடந்தது.

கூட்டத்தில் தோழமைக் கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தே.மு.தி.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

அப்போது, ''எங்களைப் போன்றே கூட்டணி கட்சிகளும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என மு.க.ஸ்டாலின்தான் கூறுகிறார், ஏனென்றால், அவர்களுக்குத்தான் ஊழல் பற்றி நன்றாக தெரியும். தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும். கல்வி, விவசாயம் கணினிமயமாக்கப்படும்.

தே.மு.தி.க. வேட்பாளர்கள் வெற்றி பெற நீங்கள் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதுபோல், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அவரவர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார். அவர் இருக்கும் மேடை முழுவதும் ஏர்–கூலர் வசதி செய்யப்படுகிறது. ஆனால் மக்கள் வெயிலில் அமர்ந்து இருக்கிறார்கள். தமிழகத்தை தலைநிமிர செய்வேன் என்று கூறும் ஜெயலலிதா முதலில் அவரது கட்சி அமைச்சர்களை தலை நிமிரச் செய்யட்டும். தமிழகத்தில் ஊழலை வளர்த்த திமுக மற்றும் அதிமுகவை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும்'' என்றார்.

அடுத்த செய்தி