ஆப்நகரம்

துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது: விஜயகாந்த் பாய்ச்சல்

எதிரிகளை மன்னித்தாலும், துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 19 Apr 2016, 8:11 pm
எதிரிகளை மன்னித்தாலும், துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil wont forgive mischief persons vijayakanth
துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது: விஜயகாந்த் பாய்ச்சல்


சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் இவ்வாறு கூறினார். முதலமைச்சராக என்ன தகுதி இருக்கிறது என்று சிலர் கேட்கின்றனர். மற்றவர்களைப் போல, பணத்தை கொள்ளையடிக்காமல் இருக்கிறேன். முதலமைச்சராக, அந்த ஒரு தகுதி போதும் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.

மேலும், தேமுதிக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைவரும், நல்ல தலைவர்கள் எனவும், அவர்களுக்கு வாக்களிப்பதால், தமிழகத்தின் வரலாறு மாற்றி அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிரிகளை மன்னித்தாலும், துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என, விஜயகாந்த் கூறினார்.

அடுத்த செய்தி